சிவகங்கை, ஜுன் 19 –
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே உள்ள பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள்(Machinist), கம்பியாள் (Wireman) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், பற்றவைப்பவர்(Welder), கணினி இயக்குபவர் (COPA) போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுடன், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டுள்ள (Industry 4.0 TATA Technology) தொழில் 4.0 மைய தொழிற்பிரிவுகளான மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னிஷியன் (Advanced CNC Machining Technician), அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical)), மெக்கானிக் எலக்ட்ரிக் வாகனம்(Mechanic Electric Vehicle) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் (Industrial Robotics and Digital Manufacturing Technician) ஓராண்டு தொழிற்பிரிவுகளும் உள்ளன. குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளில் Wireman மற்றும் Welder தொழிற்பிரிவை தவிர மற்ற தொழிற்பிரிவில் சேர மாணவர்கள் கட்டாயம் SSLC (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருத்தலும், கம்பியாள் (Wireman) மற்றும் பற்றவைப்பவர் (Welder) தொழிற்பிரிவில் சேர மாணவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலும் வேண்டும். தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையமான காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம்.
அவ்வாறு சேர்க்கைக்கு வரும்போது தங்களது நிரந்த தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (8th/10th), சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் , முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை உடன் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமன்றி பயிற்சியின் போது அரசுப் பள்ளியில் படித்த அனைத்துப் பயிற்சியாளர்களுக்கும் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.1,750/-ம் இலவச பாடப்புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவைகளும் வழங்கப்படும். மேலும், பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.