மார்த்தாண்டம், அக். 7 –
நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (33). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் சென்ற வாலிபர்கள் பிரமிளா கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சையது அலி (22). மாஹின் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குழித்துறை நடுவர் நீதிமன்ற எண் 2-ல் நடந்து வந்தது. இன்று நீதிபதி இசக்கி மகேஷ் குமார் என்பவர் சையது அலி மற்றும் மாஹின் ஆகிய இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


