களியக்காவிளை, ஏப். 3 –
களியக்காவிளையில் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 சரவன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
களியக்காவிளை ஆர்சி தெருவை சேர்ந்தவர் ஜாண் மெர்சி மார்க்ரெட். இவர் கடந்த வாரம் தனது மகள் வீட்டிற்கு செல்ல வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவில் சென்றுள்ளார். மறுநாள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 வளையல்கள் ஒரு ஜோடி கம்மல் உட்பட சுமார் ஐந்து சரவன் தங்க நகைகளை மர்ம திருடர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து ஜாண் மெர்சிமார்க்ரெட் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார், போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.


