நாகர்கோவில், மார்ச் 4 –
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் 6-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
அதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வருகை வருவதையொட்டி தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு அயலக அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அழைப்பு



