கன்னியாகுமரி, ஜூன் 24 –
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவுப்படி கன்னியாகுமரி டி.எஸ்.பி., மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் போக்குவரத்து எஸ்.ஐ., ஜெயபிரகாஷ், சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், 18 வயது குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்கக்கூடாது எனவும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது பெற்றோர்களும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும் எனவும் No Helmet No Entry குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆலயத்தின் பங்கு தந்தை யுபால்டு மரியதாசன், ஊர் தலைவர் டாலன் டியோட்டா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.