கன்னியாகுமரி, ஜூலை 7 –
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் முத்தரசி மகன் கரன் (28). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூரை சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிராமி பிரிந்து சென்று விட்டார். இதனால் கரன் கடும் மன விரக்தியில் இருந்துள்ளார். மேலும் மதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போத கடந்த ஒரு ஆண்டாக மதுப்பழக்கத்தை குறைத்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்த முறையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழவூரை சேர்ந்த முருகன் என்பவர் மகள் மாசான பேச்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கரனின் மதுப்பழக்கத்தால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் கணவன் மனைவியுடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாசான பேச்சி பாத்ரூம் சென்ற நேரம் கரன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


