கன்னியாகுமரி, ஜன. 27 –
கேரள மாநிலம் திருவனந்தபுரம், மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (78). இவர் மரத்தினால் செய்யப்பட்ட சிறு கலைப் பொருட்களை கன்னியாகுமரிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தார். இவருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததால் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரிக்கு வந்து அன்று மாலை 6 மணி அளவில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த அவரது மகன் சுனில் குமார் விரைந்து வந்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


