திங்கள்சந்தை, செப். 29 –
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102-வது ஆண்டு திருவிழா திருக்கோடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் காலை முன்னோர் நினைவு திருப்பலி, கல்லறை தோட்டம் மந்திரிப்பு நடந்தது. மாலை மேளதாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ திருக்கொடி பவனி, திருச்செபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து 7 மணிக்கு மார்த்தாண்டம் இயேசுவை காண்போம் அமைப்பின் இயக்குனர் அருட்பணி இரபேல் தலைமையில் திருக்கொடியேற்றம், மாத்திரவிளை பங்கு அருட்பணி கலிஸ்டஸ் அருளுரையில் திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடைபெற்றது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 6ம் நாள் திருவிழாவில் 1 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திருப்பலி, தங்க தேர்ப்பவனி, அன்பு விருந்தும், 8ம் நாள் திருவிழாவில் 3ம் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து பெறும் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தியானம், காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி ஆகியவை நடக்கிறது.
9 ஆம் நாள் திருவிழாவில் 4ம் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், 10 ஆம் நாள் திருவிழாவில் காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, தொடர்ந்து பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 10 மணிக்கு தூத்தூர் அருட்பணி சில்வெஸ்டர் குரிஸ் தலைமையேற்று அருளுரை வழங்கும் மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு திருத்தேர்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 7 மணிக்கு திருக்கொடியிறக்கம், இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.



