மார்த்தாண்டம், நவ. 1 –
கடையாலுமூடு அருகே உள்ள காவு விளைப் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (55) ஓட்டல் நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த 6 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். அதன் பின்னர் நெட்டா பகுதி சேர்ந்த விஜயா என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் சுந்தரேசனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பால் காலில் புண் ஏற்பட்டது. மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவ தினம் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சுந்தரேசன் இன்று இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கடையாளமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


