பரமக்குடி, ஜூலை 10 –
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்டியதற்காக போகலூர் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பரிசளித்து பாராட்டு தெரிவித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் கழக வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக போகலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் கிழக்கு ஒன்றியம் சத்திரக்குடி வாக்குச்சாவடி எண் 250 தலைமை கழகத்தால் கொடுக்கப்பட்ட இலக்கினை நிறைவு செய்தனர். அந்த வார்டில் சிறப்பாக செயல்பட்டு இலக்கினை நிறைவு செய்த ஒன்றிய செயலாளர் கதிரவன் மற்றும் வாக்குச்சாவடி மைய பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன் கவியரசு ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தலைமை கழகத்தின் இலக்கினை நிறைவு செய்து தலைவரிடம் சமர்ப்பிக்க நிர்வாகிகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.



