தென்காசி மாவட்டம்
தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியை இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு அளித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சித்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியை இழிவாக பேசியும் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவனித் சிங் பிட்டு, உத்தர பிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மகாராஷ்டிராவை சார்ந்த எம்.எல்.ஏ. சஞ்சய் கேக்குவட், டெல்லியை சார்ந்த பர்வீந்தர் சிங் மார்வ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சுரேஷ், தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் ரமேஷ், தென்காசி மாவட்ட பொது செயலாளர்கள் முகமது ரபி, சுரண்டை தேவந்திரன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், இளைஞர் காங்கிரஸ் கார்த்திக், அப்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.