திருப்பத்தூர், ஆக. 11 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன எலவம்பட்டி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லத்மபி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊராட்சியில் செயல்படுத்தபட்ட பணிகளை வரிசைபடுத்தி கூறினார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு பேசுகையில்: இந்த ஊராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சின்ன எலவம்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, தார் சாலை என பல்வேறு அடிப்படை பணிகள் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் நகர மன்ற தலைவர் பொதுக்குழு உறுப்பினர் அரசு, ஒன்றிய கவுன்சிலர் சண்முகபிரியா கமலநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருட்செல்வி, மதுமதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன், திமுக கிளை செயலாளர் வெங்கடேசன், பாண்டு, தேர்தல் பணிக்குழு சங்கர், வெங்கடப்பன், தொண்டரணி குமரேசன், மாணவரணி துணை அமைப்பாளர் விஜய பிரகாஷ், BL2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சின்ன எலவம்பட்டி பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலையினை பெற்றுத் தந்த சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.



