எட்டயபுரம், ஆகஸ்ட் 03 –
எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் து. அருணாசலபுரம் கிராமத்தில் உள்ள இந்து நாடார் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கண்மணி தர்மபண்டு சார்பில் கொண்டாடப்பட்டது. நிலக்கிழார் காசி நாடார் தலைமை தாங்கினார். து. அருணாசலபுரம் நாடார் உறவின்முறை சங்கர், பொதுச் செயலாளர் கருப்பசாமி நாடார், கீழ ஈரால் காமாட்சி சிட்பண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் காமராஜரின் கல்விப் பணிகள் மற்றும் சமூக பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன மேலும், மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உபகரணங்கள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜகநாதன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனிதா, எட்டயபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்த விழாவில் கண்மணி தர்மபண்டு நிறுவனர் சந்திர மோகன்,தலைவர் பாலமுருகன், செயலாளர் ஆனந்த் தொழிலதிபர் தங்க மாரியப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் சிவபாலன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி,துணை தலைமை ஆசிரியர்கள் முத்து உமா, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



