திருப்பூர், செப். 4 –
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என செங்கோட்டையன் முடிவு எடுத்து இன்று அறிவிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்புக்குழு புகழேந்தி கூறினார். திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி இன்று வருகை புரிந்தார். இதன் பின்னா் புகழேந்தி நிருபா்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவா் கூறியதாவது: அதிமுகவில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டையன் நாளை மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். அவரது பேச்சு புஷ்வானமாகி விடும். தமிழகமே செங்கோட்டையன் ஏதோ செய்யப்பபோகிறார் என்று எதிர்பார்த்துள்ளது. இதனால் தயவு செய்து அவர் விளையாட கூடாது. பத்திரிக்கையாளா்களை சந்திக்கும் போது கட்சி கட்டுப்பாடு முக்கியம். இதனால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பூசி முழுக கூடாது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் பயணம் செய்தால் செங்கோட்டையன் 7 முறை வெற்றி பெற்ற கோபி செட்டிபாளையத்தில் வெற்றி பெற மாட்டார். டெபாசிட் கிடைக்காது. அனைத்து தோ்தல்களிலும் தோல்வி தான் அதிமுகவிற்கு கிடைத்து வருகிறது. சா்வாதிகாரமாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வேண்டாம் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனா். எனவே இந்த முடிவை எடுத்து செங்கோட்டையன் அறிவிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமியின் தற்போதைய எதிரி ஆம்புலன்ஸ். திராவிட இயக்கத்தை இன்றைய தினம் காத்து நிற்கிற இந்திய நாட்டின் தலைவராக மு.க. ஸ்டாலினை பார்க்கிறேன். விஜயை எதிர்த்து பேச அதிமுகவினா் பயப்படுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பை சந்திக்கும். டி.டி.வி. தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதை வரவேற்கிறேன். ஓ.பி.எஸ்.யும் வெளியேறி விட்டார். அண்ணாமலை பா.ஜனதாவில் தொடரப்போவதும் இல்லை. இவா்கள் 3 பேரும் பேசி வைத்தது போல் தொிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



