மதுரை, ஆகஸ்ட் 30 –
மதுரை மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை முன்னிட்டு அதிமுக மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா. சரவணன் டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மேலும் நாளை முதல் நான்காம் தேதி வரை எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில் பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கழக மருத்துவரணி சார்பில் எடப்பாடியார் மக்களுக்கு செய்த சாதனை திட்டங்களை டிஜிட்டல் போடும் மூலம் முதுகில் சுமந்து மக்களுக்கு எடுத்துரைத்து அதன் மூலம் எழுச்சி பயணத்திற்கு மக்களை பங்கேற்க செய்யும் வகையில் நூதன பிரச்சாரம் நடைபெற்றது.
இது தொடர்பாக டாக்டர் சரவணன் கூறியதாவது: கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் கடந்த 7.7.2025 அன்று எழுச்சி பயணத்தை மேற்கொண்டு இதுவரை 118 தொகுதிகளில் 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளார். 6728 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக பேருந்து மூலம் மக்களை சந்தித்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைத்து தர மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து வருகிறார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞர்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதியை கொடுத்தது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்,
ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பு ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்பு தனியார் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும், அதேபோல ஐந்தரை லட்சம் அரசு பணியிடம் நிரப்பப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இந்த 50 மாதத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, 50 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை ஸ்டாலின் ஏமாற்றி உள்ளார்.
ஏற்கனவே மூன்று முறை தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டார். அந்த ஒப்பந்தம் காகித அறிவிப்பாக உள்ளது. அதேபோல் தற்போது நான்காம் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். இன்றைக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அதே போல மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி வேண்டும் என்றால் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
மாணவர்களாக நீங்கள் படிக்கும் போது ஆசிரியர்கள் தான் உங்களுக்கு ரோல்மாடலாக இருப்பார்கள். இன்றைக்கு இளைஞராக இருக்கும் உங்களுக்கு வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால் எடப்பாடியாரை நீங்கள் ரோல்மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உழைத்தால் ஒரு நாட்டிற்கு தலைவனாகலாம் என்ற வரலாற்றை எடப்பாடியார் உருவாக்கியுள்ளார். வருகின்ற 2026-ம் ஆண்டு இளைஞர்களுக்கு பொற்கால ஆட்சியாக இருக்கும் என்று கூறினார்.



