ஊத்தங்கரை, செப். 19 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூர் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 50 வருட பாரம்பரியமிக்க பழமையான மரங்களான தேக்கு மரம் நாகமரம், நெல்லி மரம் உட்பட பல வகையான மரங்கள் இருந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் யாரிடமும் முறையாக அனுமதி பெறாமல் தன்னுடைய சொந்த சுயநலத்திற்காக நேற்று அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு லாரியில் கடத்த முயன்ற போது அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வாகனத்தில் ஏற்றும் போது உடனடியாக வண்டியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அங்கிருந்த வாகனம் கிளம்பி விட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முறையாக யாரிடமும் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டிய தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



