ஈரோடு, ஜூலை 2 –
ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் பாலம் அருகே சித்தி விநாயகர் மூகாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஈரோடு வருமான வரித்துறை இணை ஆணையர் சுரேஷ் பாபு கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உலக தமிழ் ஜோதிட ஆய்வு நிறுவன தலைவர் ஓம் உலகநாதன், ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் அறங்காவலர் டாக்டர் சுந்தரராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



