ஈரோடு, மார்ச் 18 –
வேங்கைகள் கட்சி நிறுவனர் தமிழின்பன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பட்டியலினத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தராத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ உள்ளிட்ட துறைகளில் மூன்றாண்டுகளுக்கு மேலாக பணியாற்றுபவர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் சரியாக பணியாற்றுவார்களா என்ற ஐயப்பாடு உள்ளது. ஆகவே மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுகின்ற தாட்கோ, ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளை உடனடியாக மற்ற துறைகளுக்கோ அல்லது மாற்று இடத்திற்கோ மாற்றிட நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


