ஈரோடு, ஆக. 11 –
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27 ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் ஈரோடு முள்ளம் பரப்பில் மாவட்ட பொது செயலாளர் கார்த்தி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ரமேஷ், கொடுமுடி கார்த்தி, வக்கீல் முரளி, சண்முகம், விவேக், காஞ்சி கோவில் பழனிவேல், தேவராஜ், கவின், மொடக்குறிச்சி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் விழாக்குழு சார்பில் திருவிளக்கு பூஜை, விளையாட்டு போட்டிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்துவது விநாயகர் சதுர்த்திக்கு அரசு தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் காவிரி கரையோரம் உள்ள சோளீஸ்வரர் கோயில் அருகில் மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட, நகர், ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.



