ஈரோடு, செப். 11 –
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுப்பேரவைக் கூட்டம் ஈரோடு
ஆலயமணி திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் முதன்மை வருவாய் அலுவலர்
பிரகாஷ் வரவேற்றார். ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் குமார் பேசும்போது கூறியதாவது: மத்திய கூட்டுறவு வங்கி தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. 1,13,989 விவசாயிகளுக்கு ரூ.15,240 கோடி வட்டியில்லா பயிர்கடன்கள் மற்றும் 2,646 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.145 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் ரூ.9 கோடியே நிகர லாபம் ஈட்டி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவு துறை மூலம் விவசா மற்றும் அரசு நலத்திட்ட கடன்கள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 330 பேருக்கு ரூ. 10851 கோடி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் செல்வக்குமரன், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல்
பதிவாளர் குமார், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் முருகன், உதவி பொது மேலாளர் சோமசுந்தரம், ஈரோடு துணை மேயர் செல்வராஜ், எம் எல் ஏ க்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், வி.சி. சந்திரகுமார், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் காலிதா பானு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மாதேஷ்,
ஈரோடு வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கம் துணை பதிவாளர் ரவிச்சந்திரன், நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் ஜெயந்தி ஆகியோர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் (விவசாயக் கடன் பிரிவு) வேலுமணி நன்றி கூறினார்.



