ஈரோடு, மார்ச் 21 –
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக மினிஸ்தி, மொடக்குறிச்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக பார்தி தீக்ஷித், ஈரோடு மேற்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக ஹலக்கர் ராஜேஷ் நம் தேவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களும் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி ஆகியோர் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வாக்கு எண்ணுவதற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், உதவி ஆட்சியர் பயிற்சி ச. காஞ்சன் சௌதரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் மகேஸ்வரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



