தஞ்சாவூர், ஆகஸ்ட் 5 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து விதிகளின்படி 18 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும். எனவே தஞ்சாவூரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பதுடன் அவ்வப்போது பெற்றோர்களை சந்திக்கும்போது இது தொடர்பான அறிவுரைகளை வழங்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் போது மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது சார்ந்து விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும் மாணவர்கள் அனைவரும் தினசரி பள்ளிக்கு வருகை தரும் போது எவ்வித வாகனங்களில் வருகின்றனர் என்பதை தவறாமல் பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். அந்த வாகனங்களை பாதுகாப்பானவை தானா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக பொறுப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது



