தருமபுரி, ஜூலை 13 –
இந்தியா அளவில் தனியார் நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் 1.36 லட்சம் கோடி மோசடி – பாலக்கோட்டில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ரோஷ்ணி (18) என்ற மாணவி கடந்த மாதம் நீட் மறுதேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.
பாஜக அரசு தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்காமல் தனியாருக்கு தாரைவாக்கும் பாஜக அரசு என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கல்வி தனியாருக்கு தாரைவாக்கப்படுவதால் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 36ஆயிரம் கோடியும், தமிழகத்தில் மட்டும் 5 ஆயிரம் கோடி பயிற்சி மையம் என்ற பெயரில் மோசடி நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் இதுவரை 34 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும் மாணவி ரோஷ்ணி மறைவிற்கு அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற வந்த காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.



