ஆரல்வாய்மொழி செப் 22
குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசின் ஒட்டு திருட்டுக்கு துணைபோகும் தேர்தல் கமிசனின் ஜனநாயக படுகொலையை கண்டித்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 50% வரிவிதிப்பால் இந்திய தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் சீர்குலைவதை தடுக்க இயலாத ஒன்றிய பி. ஜே. பி. அரசை கண்டித்தும், மேலவளைவு, மாஞ்சோலை தாமிரபரணி தொடங்கி தூத்துக்குடி கவின் படுகொலைக்கான சாதிய மேலாண்மை படுகொலைகளை தடுக்க தனிசட்டம் மற்றும் சாதி ஒழிப்பு பரப்புரை மேற்கொண்டு சாதிய சமநிலை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்தியும், அம்ருத் குடிநீர்திட்டத்திற்காக ஆரல்வாய்மொழியில் சிதைக்கபட்ட தெருசாலைகளை சீரமைக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஆரல் மூத்த தோழர் குருசாமி தலைமை தாங்கினார். தோழர்கள் சி. வாசு, தங்கவேல்முருகன் ஆரல் சுந்தரம் எல். சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சியின் குமரிமாவட்ட செயலாளர் தோழர் தா. சுபாஷ் சந்திர போஸ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். ஆரல் பகவதி, ஆரல் மாநகரசெயலாளர் வி. அருள்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஆரல்பாலன் இசைகுழுவின் பறைஇசை மற்றும் மக்கள் பாடகர்கள் ஒய். புஷ்பராஜ், நெல்சன் ஆகியோரின் பாடலிசையும் ஆரல்வாய்மொழி தெருக்கள் தோறும் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.
மக்கள் சந்திப்பு இயக்கத்தில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ். சுந்தரம், தா.பூதை மகேஷ், செம்பை எஸ். கல்யாணசுந்தரம், கே. சஜேஷ், மஞ்சாலுமூடு மரியதாஸ் தோழியர்செல்வராணி, வடக்குதாமரைகுளம் செயலாளர் முருகன் நாகர்கோவில் மாநகர பொருளாளர் சி. நாகப்பன் உட்பட திரளான தோழர்கள் கலந்து கோஷங்கள் எழுப்பி பிரச்சாரத்தில் கலந்து கொண்டணர்.



