மார்த்தாண்டம், அக். 25 –
தமிழ்நாடு வாள் விளையாட்டு கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் நடத்தும் சீனியர் பிரிவிற்கான மாநில அளவிலான வாள் விளையாட்டுப் போட்டி ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழக பயிற்சி மையத்தில் 25 மற்றும் 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகதலைவர் பி.கெ. சிந்துகுமார் தலைமை வகித்தார். கன்னியாகுமரி வாள் விளையாட்டு கழக இணைச்செயலாளர் செல்வி இலக்கியா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பர்ட் வாழ்த்துரை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், மேற்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சாமுவேல், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுபீர் ஜெபசிங், முன்னாள் குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



