தூத்துக்குடி, ஜுலை 24 –
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைகளில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத ஏழு கடைகள் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன் அறிவுரையின்படி உதவி வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் உதவியாளர்கள் கொண்ட குழுவினரால் சீல் வைக்கப்பட்டது.
மேலும் 2 மாதங்களுக்கு மேலாக வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மேற்படி கடைகளும் சீல் வைக்கப்படும். எனவே மாநகராட்சி கடைகளின் குத்தகைதாரர்கள் உடனடியாக வாடகை நிலுவை தொகையை செலுத்திட தெரிவிக்கப்படுகிறது.



