புதுக்கோட்டை, அக்டோபர் 17 –
புதுக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் துவார் ரெங்கராஜன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள ஆத்தாங்கரைவிடுதிக்கு புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் இருந்து பிரிவு சாலை செல்கிறது. அந்த சாலை பெரிய குளப்பெண்பட்டியில் இருந்து ஆத்தாங்கரைவிடுதி வழியாக மங்களாகோவில் செல்கிறது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் செல்லும் இந்த சாலை மிகவும் மோசமடைந்து பள்ளமும் படுகுழியாக பயணிக்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.
இந்த சாலை வழியாகத்தான் துவார் மற்றும் ஆத்தாங்கரைவிடுதி பொதுமக்கள், கர்ப்பினி பெண்கள் வெள்ளாள விடுதி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. அதே போல் துவார் ஆத்தாங்கரை விடுதி பொதுமக்களுக்கு சேவை வங்கியாக உள்ள கல்லாக்கோட்டை சென்ட்ரல் பேங் ஆப் இந்தியா வங்கி கிளைக்கு செல்ல வேண்டியுள்ளது. இரண்டு கிராமங்களிலும் சுமார் 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். வங்கி சேவைக்கு இரண்டு கிராம மக்களும் இந்த சாலை வழியாகதான் சென்று வர வேண்டியுள்ளது. மற்றும் அரசு வேளாண் பன்னை வெள்ளாள விடுதியில் அமைந்துள்ளது. அதற்கும் இந்த சாலை வழியாகதான் விவசாயிகள் செல்ல வேண்டியுள்ளது.
இந்த சாலையில் அக்கினியாற்றில் உயர் மட்ட பாலம் கட்டி சில மாதங்களுக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் பெரிய குளப்பெண்பட்டியில் இருந்து ஆத்தாங்கரை விடுதி வழியாக மங்களாகோவில் வெள்ளாள விடுதி செல்லும் சாலை பயணிக்க முடியாத அளவு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த சாலையை புதிப்பித்து புதிதாக செப்பனிட்டு புதிய சாலையாக அமைத்து கொடுத்து போதுமக்களின் சிரமத்தை போக்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



