மார்த்தாண்டம், ஆக. 12 –
அருமனை சந்திப்பில் ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகை கடன் கொடுப்பது வழக்கம். பல வருடங்களாக மேல்பாலை பகுதியை சார்ந்த அனில் குமார் மனைவி ஷாலினி (35). நகை பரிசோதனராக வேலை பார்த்து வருகிறார். இங்கு இன்றைய தினம் சோதனை செய்யும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் விசாரணை மேற்கண்ட போது நகைகள் அனைத்தும் ஷாலினி என்பவருடைய உதவியில் வைக்கப்பட்ட நகை கணக்குகள் என்பது கண்டறியப்பட்டது.
அவரது தாய் மற்றும் தந்தை உறவினர்களுடைய பெயரில் கணக்கு இருக்கின்றது. இதை பரிசோதனை செய்தவர்கள் கண்டறிந்து கேட்ட போது தகவல் வெளியே சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அருமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது சுமார் 17 நகை கணக்குகள் வைக்கப்பட்டு இருப்பதும் அதில் 12 நகைக் கணக்குகளில் இருக்கும் நகைகள் முற்றிலும் போலி நகைகள் என்பதும் அது சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புடையது என்றும் சராசரியாக 40 பவுன் நகைகள் போலியாக இங்கு இரண்டு வருடங்களாக வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.



