மார்த்தாண்டம், ஜன. 29 –
மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் மணி என்பவர் மகள் ஷீஜா (45). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் சுரேந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மீண்டும் மேல்புறத்தில் உள்ள தந்தை விட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்யும் சதீஷ்குமார் (40 ) என்பவர் உடன் ஷீஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இதற்கு இடையில் இவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டு சதீஷ்குமார் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு ஷீஜாவுடன் மேல்புறத்தில் வாடகை வீடு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்று சதீஷ்குமார் பின்னர் ஷீஜாவிடம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷீஜா அவர் குறித்து விசாரித்த போது, அவர் அருமனை பகுதியில் அவரது அண்ணன் சந்திரசேகர் என்பவரது வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக ஷீஜா அங்கு சென்று சதீஷ்குமார் குறித்து கேட்டுள்ளார். அப்போது சதீஷ்குமார் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஷீஜா திடீரென அவர் கொண்டு சென்ற பையில் திறந்து பிளேடை எடுத்து கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இது குறித்து அருமனை போலீசர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


