சங்கரன்கோவில், செப். 15 –
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேல நீலகநல்லூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குருக்கள் பட்டியில் வைத்துதிமுக கழகத்தை தொடங்கியவரும், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியவரும், இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் என உறுதியாக இருந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலங்கரித்து கூறியுள்ளார் பேரறிஞர் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிமேகலை, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன் செந்தூர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகாராஜன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூலியூர் கணேசன், கிளைக் கழகச் செயலாளர்கள் சுகுமாரன், பாபு, அந்தோணி, எம். துரை, மரிய சுந்தர்ராஜ், நாகராஜன், கணேசன், பவுன்ராஜ், தமிழ்ச்செல்வன், பால்ராஜ், மருதையா, கருப்பசாமி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராஜதுரை, ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தங்கதுரை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கோட்டைபாண்டி, வேலுத்துரை, குமார், மைனர்சாமி, குருக்கள்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ் மற்றும் அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



