நாகர்கோவில், பிப்ரவரி 24 –
அய்யா வைகுண்டர் நினைவாக கேரள அரசு மணிமண்டபம் கட்ட முன்வந்துள்ளதை போன்று, தமிழ்நாடு அரசும் அய்யா வைகுண்டருக்கு சுவாமி தோப்பில் மணிமண்டபம் கட்ட முன் வர வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: ‘தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று சமுகத்தால் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, ஏழை எளிய மக்களை காத்து, அவர்களுக்கு சமுகநீதி வழங்கி சமத்துவத்துடன் வாழ வைக்க வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் சமதர்ம மகத்துவமாகும்.
அவரின் கேரள அரசு திருவனந்தபுரத்தில் மணிமண்டபம் கட்ட முன் வந்துள்ளது. அதற்குரிய அடிக்கல் நாட்டு விழாவும் வருகிற 28-ந் தேதி கேரள முதல்வர் பிரனாய் விஜயன் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதே போன்று தமிழ்நாடு அரசும் அய்யா வைகுண்டரின் தலைமைபதியான கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் மணிமண்டபம் கட்ட முன் வர வேண்டும். அதற்காக அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வேளியிட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



