களியக்காவிளை, செப். 23 –
படந்தாலுமூடு அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது கிடைத்துள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சிறப்புமிக்க கிருஷ்ணா ஜீவல்லரி டிரஸ்ட் குரூப் சமூக சேவை செய்து வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த சாதனையாளர்களை பாராட்டி விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். அத்துடன் நூறு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வருடத்திற்கான மயில்பீலி விருது – 2025 குமரி மாவட்ட பரம்பரை சித்த மணிவர்ம மருத்துவத்தின் சார்பில் அதன் வளர்ச்சிக்காக சிறந்த சேவை செய்து வரும் பிரபல வர்ம மருத்துவர் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்க்கு கிடைத்துள்ளது. இந்த விருதினை கண்ணூர் பீச் ரிசார்ட்டில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
கண்ணூர் சீமேனி அவதூதா ஆஸ்ரமம் மடாதிபதி சுவாமி சாது வினோத்ஜி இந்த விருதினை வழங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ண பீச் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற டாக்டர் சுரேஷ் குமாரை தமிழக கேரளா வைத்திய சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.



