ஈரோடு, அக். 1 –
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அந்தியூர் வார சந்தையில் புதிதாக கட்டப்பட்ட விற்பனை வளாகத்தில் ஆடு கோழி போன்றவற்றை விற்பனை செய்ய கடைகள் இருப்பது போல மாட்டு இறைச்சி விற்பனைக்கு வளாகம் கட்டிடங்கள் கட்டி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டது.
தற்போது அங்கே வார சந்தை புதிதாக கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் மாட்டிறைச்சி விற்பனை வளாகம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சிக்கு மட்டும் தடை விதித்து உள்ளது. எனவே அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சிக்கு விற்பனை வளாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான நிபந்தனை பட்டாக்கள் நிலங்களை தலித் அல்லாதோர் அபகரித்து கொண்டனர். இந்த நிபந்தனை பட்டாக்களை நீக்கம் செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழ் நாடு அரசு தலித் அல்லாதோர் நிபந்தனை பட்டாக்கள் நிலங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



