திருப்பூர், செப்டம்பர் 24 –
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் , 15-வேலம்பாளையம் பகுதி கழகம்,10-வது வார்டு, ஆத்துபாளையம் சாலையில் 10-வது வார்டு செயலாளர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், பிகேஎம். முத்து, கண்ணன், ஹரிஹரசுதன், கனகராஜ், சிவளா தினேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர். பழனிச்சாமி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஆண்டவர் பழனிச்சாமி சந்திரசேகர், பகுதி கழக துணை செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் த. ஹரிபிரசாத், தலைமைக் கழக பேச்சாளர்கள் எரியீட்டி சேகர் பலகுரல் வெள்ளியங்கிரி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் யுவராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் பானு ரேகா ராஜலட்சுமி, வித்யா மற்றும் கழக நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.



