வேலூர், செப். 15 –
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் அத்தியூர் களங்கமேடு கிராமத்தில் காப்பு காட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கால பைரவர் திருவிழா 15-வது ஆண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடும் சிறப்பு அலங்காரமும் சிறப்பு ஆராதனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் விநாயகர் பூஜையும் பகல் 12 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் க்கு பூஜை கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. பகல் ஒரு மணிக்கு சிவனுக்கும் நந்தி பகவானுக்கும் பூஜையும் பகல் 2 மணி அளவில் ஸ்ரீ கால பைரவருக்கு சிறப்பு பூஜையும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அண்ணாமலை ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் ஜீவா சேட்டு, துணைத்தலைவர் ஜெய்சங்கர் மற்றும் விழா குழுவினர்கள் சேகர், சத்தியமூர்த்தி, திருப்பதி மற்றும் ஊர் பெரியவர்கள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.



