வேலூர், ஜூலை 04 –
வேலூர் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக வாயிலில் அனைத்து சங்க தொழிலாளர்கள் சார்பில் தமிழக அரசை கண்டித்து தொமுச மாநில பொருளாளர் கோவிந்தராஜ்
தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நேர்மையான முறையில் பணி செய்து வரும் மாவட்ட பொது மேலாளர் சத்தியனை எந்தவித முன்னறிவிப்புமின்றி பதவி இடை நீக்கம் செய்த நிர்வாக இயக்குநர் மற்றும் துறை அமைச்சரை கண்டித்தும், இடைநீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட தலைவர் ஆனந்த குமார், துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ராணிப்பேட்டை தலைவர் பாபு, திருப்பத்தூர் தலைவர் ராஜேஷ்கண்ணா மற்றும் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



