விளாத்திகுளம், ஜூன் 9 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எஸ்.அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. புதூர் வேளாண் உதவி இயக்குனர் சுப்புலட்சுமி சிறப்பு உரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஸ்காட் ஒருங்கிணைந்த வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் முத்துக்குமார் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும், துணை வேளாண் அலுவலர் சின்னச்சாமி உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் பற்றியும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.



