ஈரோடு, மே 9 –
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்து இருந்தார்.
இதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் உதயகுமார் தெற்கு மாவட்ட தலைவர் முத்து குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் எம் எல் ஏ ஆர் எம் பழனிசாமி மாவட்ட முன்னாள் தலைவர்கள் ரவி திருச்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் 4 ம் மண்டல மண்டல தலைவர் கோபி நிர்வாகிகள் குப்பண்ணா சந்துரு குளம் ஆறுமுகம் முகமது அர்சத் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



