தருமபுரி, ஏப்ரல் 22 –
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களை கவரும் வகையில் வாழைமரம் தோரணங்கள், வாழைப்பந்தல், தாவரம் மற்றும் வரவேற்கும் வழி காட்டவும் ரோபோ, கலர் கோடிங் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.சதீஸ், நகராட்சி அன்னசாகரம் தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த ஆட்சியர் சதீஸ்: தருமபுரி மாவட்ட தேர்தல் இந்த முறை ‘கிரீன் எலக்ஷன்’. பிளாஸ்டிக் கிடையாது. டீ கப் முதல் தண்ணீர் குவளை வரை எல்லாம் மக்கும் தன்மை கொண்டதாக பயன்படுத்தப்படும். மேலும் முதல்முறை வாக்காளர்களுக்கு ஸ்பெஷலாக விதை பேனா, விதை பென்சில், விதைப்பந்து, மரக்கன்று வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி தூக்கி எறிஞ்சா மரமாக முளைக்கும். மேலும் வாக்களித்த வர்களுக்கு கூடவே ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்து போட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இளைஞர்களை இழுக்க ரோபோ. 7-9 பூத் சேர்ந்த பெரிய சென்டர்கள்ல ரோபோ நிக்கும். என்ன டாக்குமெண்ட் வேணும், எப்படி ஓட்டு போடணும்னு சொல்லிக்கொடுக்கும். கலர் கோடிங், ரோபோ வாழைமரம், தோரணங்கள் வரவேற்பு. ‘ஜனநாயகப் பெருவிழா’ விழாக்கோல ஏற்பாடுகள் செய்துப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 150 பதட்டமான பூத்கள் கண்டறியப்பட்டுள்ளது. 2,500 காவலர்கள், துணை ராணுவம், லோக்கல் போலீஸ், கேரளா டீம் எக்ஸ் சர்வீஸ் மேன், ஹோம் கார்டு எல்லோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து பூத்திலும் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. முன்னாடி பதட்டமான பூத்ல மட்டும் தான் இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் 100% கேமரா மாற்றுத்திறனாளி, முதியோருக்கு, விஐபி ட்ரீட்மென்ட் செக்சன் ஆப்ல பதிவு செய்தல் வீட்டுக்கே வண்டி வரும் அவர்களை இருக்கும் இடத்தில் வீல் சேர் மூலம் தன்னார்வலர்கள் அழைத்து வந்து வாக்களிக்க உதவி செய்வார்கள்.
எல்லா பூத்லயும் சாய்தளம், குடிநீர், டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. மலை கிராமமான ஏரிமலைக்கு போன தேர்தலில் கழுதைகள் மூலம் பெட்டிகள் அனுப்பினோம். இந்த தடவை ரோடு போட்டதால் டிராக்டர் மூலம் அனுப்பப்படும் வேலு வெயிலுக்கு ஓ ஆர் எஸ் வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஆறு மெடிக்கல் டீம், மொத்தம் 30 டீம் ரோந்து பணியில் இருப்பார்கள். வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களை அரசியல் கட்சிகள் வண்டி வைத்து அழைத்து வரக்கூடாது. உதவி வேணும்னா 1950க்கு கால் பண்ணுங்க அரசாங்கமே கூட்டிட்டு வருவோம் என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.



