நாகர்கோவில், ஆக. 27:
நாகர்கோவில் மாநகராட்சியின் 40-வது வார்டு வடலிவிளை பகுதியில், குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய் வசந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜஸ்வர்யா, நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவபிரபு, மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா, மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், அகஸ்டினா கோகிலவானி உள்ளிட்ட காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



