தஞ்சாவூர், ஜூன் 25 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் துரித உணவு வகைகள் மற்றும் சர்க்கரை எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்தல் குறித்து சர்க்கரை வேண்டாம், எண்ணெய் வேண்டாம் என்ற விழிப்புணர்வு பதாகையில் மாவட்ட கலெக்டர் ரேவதி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது: இந்தியாவில் ஊட்டச்சத்து குறை பாடுடன் உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இதே நோய்கள் போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் போஷன் டிராக்கர் தரவுகளின் படி ஆரோக்கியமற்ற உணவு முறைகள் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளுதல் மற்றும் உடலுலழைப்பற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் குழந்தைகள் 5 சதவீதம் அளவு உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடையுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் மற்றும் தொற்றா நோய்கள் எதிர்த்து போராட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் மேம்படுத்துதல் குறித்து ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. எனவே எண்ணெய் மற்றும் சர்க்கரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மற்றும் ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்கள் மேம்படுத்துதல், குறித்து அரசு அலுவலகங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பவர் களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவை அடங்கிய விழிப்புணர் பதாகைகளை மாவட்ட கலெக்டர் ரேவதி கையெழுத்து இயக்கம் மூலம் துவக்கி வைத்தார்
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது அனைத்து வட்டாரங்களிலும் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாயிரா பானு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



