திருச்சி, ஜுன் 11 –
லால்குடி அருகே மேலவாளாடி, கீழவாளாடி அப்பாதுரை கிராமங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நீண்ட நேர மின்நிறுத்தம் காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



