ஈரோடு, செப். 15 –
ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் 3 அணியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இதில் தலைவராக துரைசாமி, செயலாளராக ராஜேந்திரன், பொருளாளராக குமார், துணை தலைவர்களாக தங்க வேல், சண்முக சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்பு நடந்த வளாகத்தில் நந்தா மருத்துவ கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. ஏராளமான பேர் இதில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் செய்திருந்தார்.



