முதுகுளத்தூர், ஜூன் 16 –
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் பசலி 1435ம் ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) வி.கங்காதேவி, வட்டாட்சியர் கோகுல்நாத், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மரகத மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
மேலும் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் ராஜேஸ்வரன், பொருளாளர் மணிமூர்த்தி, செயலாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், பெரியசாமி, தனவேந்தன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிலம், பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) வி. கங்காதேவி, வட்டாட்சியர் கோகுல்நாத், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மரகத மேரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
மேலும் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வட்டத் தலைவர் ராஜேஸ்வரன், பொருளாளர் மணிமூர்த்தி, செயலாளர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், பெரியசாமி, தனவேந்தன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிலம், பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.



