தருமபுரி, செப்டம்பர் 23 –
தருமபுரி விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான தேர்வு சதுரங்க போட்டியில் பள்ளி ஆண்கள் பிரிவில் ஏழு சுற்றுகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவன் தர்மேஷ் முகுல் 6.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அரினா இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்று அசத்தி உள்ளார். மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
அதிக புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்த தேவேஷ் முகுல் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 85 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளனர். முதலமைச்சர் கோப்பைக்கான தேர்வு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் பதக்கம், பாராட்டு சான்றிதல்களை வழங்கினார்.
இதில் சதுரங்க போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ள தனியார் பள்ளி மாணவன் தர்மேஷ் முகுல் க்கு மாவட்ட ஆட்சியர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதல்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் D.சாந்தி மற்றும் போட்டியின் முதன்மை நடுவர் P. ராஜசேகரன் மாணவன் தர்மேஷ் முகுலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



