திருச்சி, மே 12 –
முசிறி அருகே காருகுடி கிராமத்தில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது தனுசுயா கிணற்றில் விழுந்தார். தகவல் அறிந்த முசிறி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுமியை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



