தருமபுரி, ஆகஸ்டு 03 –
தருமபுரி மாவட்டம் மிட்டா நூல்அள்ளி மட்டிகான் தோப்பில் அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ வீரமணி கட்டி ஆஞ்சநேயர் சஞ்சீவ் வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காலை 10 மணி அளவில் கங்கைபூஜை பூங் கரகம் அம்மன் கரகம் பால்குடம் எடுத்து பம்பை வாத்தியம் முழங்க ஊர்வலமாக ஆஞ்சநேயர் கோவிலை வந்து அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மதியம் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ளி பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



