மார்த்தாண்டம், ஜூலை 17 –
குமரி – கேரளா எல்லை பகுதி பூவார் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் மனைவி அஞ்சு (28). இவர் காரக்கோணம் தனியார் மருத்துவக் கல்லூரியில் லேப் டெக்னீஷனாக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு செல்வதற்காக கண்ணுமாமூடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயச்சந்திரன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ ஒன்று அஞ்சுவின் பைக்கின் மீது மோதியது. இதில் அஞ்சு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று மார்த்தாண்டம் அருகே நெல்வேலி பகுதியை சேர்ந்தவர் கோபி (45). இவர் இருசக்கர வாகனத்தில் நட்டாலம் பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குன்னுவிளை பகுதியை சேர்ந்த மெர்லின் (45) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ பைக்கில் மோதியது. இதில் கோபி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஆட்டோ கவிழ்ந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த பூட்டேற்றியை சேர்ந்த ஜெபா (35) என்பவரும் ஆட்டோ டிரைவர் மெர்லின் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


