By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

Last updated: February 24, 2026 6:48 pm
February 24, 2026
109 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 24 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் 1984 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லையானது திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் துவங்கி கேரள மாநிலம் பாறசாலை ரயில்வே ஸ்டேஷன் வரை எல்லை சுமார் 127 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.

நாகர்கோவில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் நடைபெறும் குற்ற சம்பவங்கள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அதிக நேரமும் பயண தூரம் இருந்தது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குழித்துறை ரயில் நிலையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான அரசாணை 2025-ல் அன்று பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி குழித்துறையில் புதிய ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். திருவனந்தபுரம் கோட்ட பாதுகாப்பு ஆணையர் முகமது ஹனீப் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி ரயில்வே டிஎஸ்பி இளங்கோவன், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் கேதரின் சுஜாதா திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன் கூறியதாவது: ரயில்வே பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக மார்த்தாண்டத்தில் குழித்துறை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே போலீஸ் கோட்டத்தில் 25 வது ஸ்டேஷன் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது ஸ்டேஷன் ஆகும்.

நாகர்கோவில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் முதல் பாறசாலை வரை 33 கிலோ மீட்டர் இதன் எல்லையாக உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு உட்பட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ரயில்வே எஸ்பி ராஜன் கூறினார்.

மார்த்தாண்டம் பகுதியில் ரயில்வே சம்பவங்கள் நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. நேற்று முதல் இந்த ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் விரிவாக்கத்தை திறந்து வைத்த அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது தவிர்த்து சென்றார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கவர்னகிரியில் மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்

April 17, 2025
77 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தடயவியல் துறை
குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டி
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account