கன்னியாகுமரி, ஜூலை 15 –
குமரி மாவட்டம் மயிலாடியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடி பகுதியிலுள்ள அனைத்து அங்கன்வாடி பள்ளிகளுக்கும் மயிலாடி பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் மயிலாடி சுப்ரமணியபுரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மயிலாடி பேரூர் தவெக சார்பில் இனிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி உபகாரணகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக மயிலாடி பேரூர் செயலாளர் சகாய ஜோசப் விஜய் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மயிலை மோகன், நகர காங்கிரஸ் தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதில் பேரூர் தவெக துணை செயலாளர் சஜின், கிளைச் செயலாளர் ஜெபின், நிர்வாகி டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



